கிருஷ்ணகிரி,ஏப்.14- கிருஷ்ணகிரி மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபி நாத்துக்கு ஆதரவாக ஓசூர் மாநகர வீதிகளில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் கரு.பழனியப்பன் பேசுகையில், தமிழகத்தில் 65 இடங்க ளில் தனியார் சுங்கச்சாவடிகள் அதிக மான கட்டணம் வசூலித்து வரு கிறது. இதில் காலாவதியான பல சுங்கச்சாவடிகளின் சட்ட விரோத மாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டிகளை ஏமாற்றி ஒன்றிய அரசின் உதவியோடு தமிழக மக்களை சுரண்டி வருகிறது. அதேபோல தொழிற்சாலைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒன்றிய அரசு வரியை வாரி குவித்து வருகிறது.ஆனால் தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கை தர மறுத்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட முதல்வர் ஸ்டாலினும் உறுதி அளித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் பேசிய பொதுக்கூட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு அவர்களின் பேச்சைக் கேட்டுஉண்மையை உணர்ந்துள்ளனர். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடிப்பது யார் என்பதற்கான போட்டிதான் அதிமுக, பாஜகவும் இருக்கின்றன. மோடி வாரம் ஒரு முறை தமிழ் நாட்டுக்கு வந்தால் கூட பாஜக ஒரு தொகுதி யில் கூட வெல்ல முடியாது. முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு இதுவரை என்னென்ன வாக்குறுதி களை நிறைவேற்றியுள்ளது என்பதை சொல்லி வாக்கு கேட்கிறார். தமிழ கத்திற்கும் நாட்டுக்கும் எதுவும் செய்யாத மோடி சாதனைகள் எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. தொலைபேசியை எடுக்கும் போதெல்லாம் வணக்கம் தாமரை என்று சொல்ல வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். வாக்காளர்களே ஏப்ரல் 19 அன்று அடக்கம் தாமரை என்று சொல்லுங்கள் என்று கரு. பழனியப்பன் கூறினார். பிரச்சாரத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா துணை மேயர் ஆனந்தய்யா ,தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ்,சுகுமாரன், சிபிஎம் மாநகர செயலாளர் சி.பி.ஜெய ராமன்,நிர்வாகிகள் ஜேம்ஸ் ஆஞ்சால மேரி,ஸ்ரீதர்,எம்.எம்.ராஜு,கிளைச் செயலாளர்கள் முருகன்,குணசேகரன், எஸ்.ஆர். ஜெயராமன் உள்ளிட்ட இந்தியாகூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.