districts

காவல் நிலையத்தில் 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதா? குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் மூவர் விடுதலை

சென்னை,ஜன.8-  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 பெண்கள் கஞ்சா விற்றதாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  அந்த 3 பெண்களிடம் இருந்தும் பறி முதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த வழக்கு போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது.  அந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் கஞ்சாவையும்  நீதிமன்றத்தில் ஒப்படைத்த னர். ஆனால், 30 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை ஆகியவற்றில் பெண்களிடமிருந்தும் பறிமுதல் செய்தது 30 கிலோ கஞ்சா என காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நீதி மன்றததில் ஒப்படைத்த போது அதில் 19 கிலோ கஞ்சா குறைவாக இருந்தது. கஞ்சா ஏன் குறைவாக இருக்கிறது என்று  நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது எழுத்து பூர்வமாக கடிதம் ஒன்றை அளித்தனர். அதில், “ கஞ்சா, போதைப் பொருள் பரி சோதனைக்குட்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டி ருந்தது. கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாமல் காணப்பட்டது. மேலும் மழை யாலும் கட்டிடம் சேதமடைந்தது. இதனால் அங்கு எலித் தொல்லை அதிகமாக காணப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து கடித்ததால் அதன் அளவு குறைந்து விட்டது” என்று கூறியிருந்தனர்.  கஞ்சாவை  எலிகள் தின்று விட்டதாக காவல்துறையினர் அளித்த பதிலை கேட்டு நீதிபதி அதிருப்தியடைந்தார். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை காவல்துறையினர் சமர்ப்பிக்க தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்களை யும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

;