districts

img

நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை பாதங்களை பரிசோதிப்பது அவசியம்

சென்னை, அக்.23- நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை பாதங்களை பரிசோதிப்பது அவசியம் என்று பிரபல நீரிழிவு மருத்துவ நிபுணரும் ராயபுரம் எம்.வி. டயாபடீஸ் மருத்துவமனையின் நிறு வனருமான டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறினார்.  எம்.வி. டயாபடீஸ் மற்றும் யுஎஸ்ஏ–ஐ  என்ற மருத்துவர்கள் அமைப்பு இணைந்து டயாபெட்டிக், ஃபுட் ரீசர்ச் இந்தியா  என்ற பெயரின் கீழ் இந்தியாவில் முதன் முறையாக பாத மருத்துவத்திற்கான பள்ளி சென்னை ராயபுரத்தில் தொடங்கப்படவுள்ளது.   நீரிழிவினால் ஏற்படும் பாத தொற்று காரணமாக வரும் சிக்கல்களை தடுப் பது குறித்தான விழிப் புணர்வு கல்வியை ஏற்ப டுத்த இந்த பள்ளி தொடங் கப்படுவதாக செய்தி யாளர்களிடம் பேசிய டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறினார். இங்கு நீரிழிவு பாத சிகிச்சை தொடர்பான அனைத்து பணிகள் மற்றும் நக பராமரிப்பு போன்ற பாத மருத்துவத்தின் அடிப்படை  அம்சங்களில் மருத்துவர்க ளுக்கும் மற்றும் துணை  மருத்துவப் பணியாளர் களுக்கும் பயிற்சியளிக்க உள்ளது என்றும் அவர் கூறினார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரின் கால் விரல்களை வெட்டாமல் எப்படி தவிர்ப்பது என்பது குறித்து கல்வியையும், பாத  மருத்துவத்திற்கான பள்ளி யின் முதன்மை இலக்காக இருக்கும் என்றார்.  இந்த கல்விக்கான  பயிற்சி மற்றும்  முதல் செயல் திட்டமானது  ராய புரம் எம்.வி. டயாபடீஸ்  மருத்துவமனை வளாகத் தில், அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கியது.           அக்-25ம் தேதி வரை நடைபெற உள்ளது.