சென்னை, அக். 26- சென்னை சுகாதாரமாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் தான் காரணம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு தனியார் தொழில் கல்லூரியில் நடைபெற்ற தூய்மை பணி யாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 1,500 தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்க ளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரி விக்க வந்திருக்கிறேன். சென்ற ஆண்டு சென்னையில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. நாங்கள் களத்தில் இருந்ததற்கு நீங்கள் தான் எங்களுக்கு துணையாக இருந்தீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு சென்னையில் தண்ணீர் நிற்கவில்லை. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆற்றிய பணிகளால் எளிதில் சென்னை மீண்டு வந்துள்ளது. சென்னை மக்க ளுக்கு ஒரு தாய் போல இருந்து பணியாற்று கிறீர்கள். எந்த மழையையும் எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என நாங்கள் தைரியமாகக் கூற நீங்கள் தான் காரணம். அடுத்த மழைக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன். சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.