districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை மறுக்கும் கோகோ கோலா நிறுவனத்திற்கு கண்டனம்

சென்னை, டிச. 4- மாற்றுத்திறனாளி களுக்கு வேலை வழங்க மறுக்கும் கோகோ கோலா நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் அம்பத்தூர் பகுதி பேரவைக் கூட்டம் ஞாயிறன்று (டிச. 4) நடைபெற்றது. சிஐ டியு தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி கலந்து கொண்டு பேசுகை யில், பூந்தமல்லி நேமம் பகுதி யில் இயங்கும் கோகோ கோலா நிறுவனம் திடீ ரென மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்துள்ளது. தமிழக அரசும், மாவட்ட தொழிலாளர் நலத் துறை யும் தலையிட்டு உடனடி யாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை யென்றால் சிஐடியு சங்கத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளி சங்க மும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். இதில் சிஐடியு வட சென்னை மாவட்டச் செய லாளர் சு.லெனின் சுந்தர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ஆர்.நடராஜன், பகுதி செயலாளர் ஜெ.ரவி ஆகியோரும் பேசினர்.

;