சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திய பாஜக அரசை கண்டித்து வந்தவாசி, செய்யாறில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன் பா. செல்வன், நிர்வாகிகள் பெ.அரிதாசு, யாசர் அராபத், அப்துல் காதர், டி. வெங்கடேசன், வே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.