சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கட்டய்யா, விசிக கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் தொகுதி செயலாளர் அலெக்சாண்டர், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி சிறகை தமிழ்ச்செல்வன், சிலம்பு விஜயன் ஆகியோர் பேசினர்.