புதுச்சேரி, ஏப். 24 - கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க நிவார ணங்களை அறிவிக்கக் கோரி சனிக்கிழ மையன்று (ஏப்.24) புதுச்சேரி முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா பெருந் தொற்றி லிருந்து மக்களை பாதுகாக்க 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும், வெளிச் சந்தையில் தடுப்பூசியை விற்ப தற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்குவதை திரும்பப் பெற வேண்டும், பி.எம்.கேர் நிதியில் இருந்து நிவாரண நிதி வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்துள்ள முறைசாரா, ஆட்டோ, கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் அறிவிக்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை இலவசமாக நியாய விலைக் கடைகள் மூலம் உடனடி யாக வழங்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நகரம், உழவர்கரை நகர கமிட்டி, வில்லியனூர், பாகூர் நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன் குழுக்களுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட இடங்க ளில் தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்து. இதில், புதுச்சேரி பிரதேச செயலா ளர் ராஜாங்கம், தமிழ்நாடு மாநி லக்குழு உறுப்பினர் பெருமாள், புதுச்சேரி நகர குழு செயலாளர் மதி வாணன், இடைகுழு செயலாளர்கள் நடராஜன், ஐயப்பன், தமிழ்ச்செல் வன், அன்புமணி மற்றும் செயற்குழு, பிரதேச குழு உறுப்பினர்கள் பேசினர்.