ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.