4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அண்ணாகுபேரன், மாவட்டத் தலைவர் விஜயகுமரன், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் பேசினர்.