சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை கண்டித்தும் மீண்டும் கல்வி உதவித் தொகையை வழங்கக்கோரியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எப்.முகமது சகில் தலைமை தாங்கினார்.மாவட்டத் தலைவர் எஸ்.எம்.அனீப், மாவட்ட செயலாளர் ஏ.அப்சல்அகமது, பகுதி செயலாளர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எஸ்.எம்.கமுருதீன், மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.நடராஜன், ஆர்.கிறிஸ்துதாஸ் உட்பட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.