சத்துணவு சமையல் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.