districts

img

குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பூம்பொழில் நகரில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் கழிவு நீர், குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவர் சு.பால்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் திராவிட மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.