அவசர தேவைகளுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, ஊதியத்தை காலதாமதம் செய்வது, அடிக்கடி பணி மாறுதல் வழங்குவது, பணி நேரம் முடிந்த பிறகும் கூடுதல் நேரம் வேலை செய்ய பெண் ஊழியர்களை நிர்பந்திப்பது என ஊழியர்களுக்கு விரோதமாக இணை ஆணையர் எஸ்.கோபால சுந்தர ராஜ் செயல்படுவதாக குற்றம்சாட்டி செவ்வாயன்று (மார்ச் 7) நந்தனம் நிதித்துறை வளாகத்தில், வணிகவரி சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.