ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனை அருகே செவ்வாயன்று (பிப். 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொருளாளர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், ம.பூபாலன், சு.பால்சாமி, மணிமேகலை, ஜி.மூர்த்தி, எஸ்.லூர்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.7) மூர்மார்க்கெட் அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் எம்.சந்திரன் மற்றும் பி.சீனிவாசுலு, முனுசாமி (செங்கொடி சங்கம்), சுந்தரம் (தையல்), அருள்குமார் (முறைசாரா), சந்தானம் (கிளப் சங்கங்கள்) உள்ளிட்டோர் பேசினர்.