districts

img

தமிழக ஆளுநரை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன்களை பணி நியமனம் செய்து, காலமுறை ஊதியத்துடன் விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் கே.காங்கேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் எ.பெருமாள், எஸ்.ரவி, மண்டல செயலாளர் ஆர்.சிவராஜ், வட்டச் செயலாளர் மு.பாலாஜி, பொருளாளர் வி.எம்.வெங்கடேசன், மேற்கு கோட்ட செயலாளர் ஆ.குருதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.