districts

img

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீதான கொடூரமான தாக்குதலை நிறுத்தக்கோரி பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் வே.குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, முன்னாள் பொதுச் செயலாளர் ந.சேகரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பொருளாளர் நாகமணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க செயலாளர் பி.கே. முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி கவுன்சிலர் மா.கௌதம் முத்து ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகி ராதா லட்சுமணன் நன்றி கூறினார்.