சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ப.செல்வன், எஸ். ராமதாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நிர்வாகிகள் குமரன், சி.எம்.பிரகாஷ், செல்வி, அண்ணாமலை, அசோக், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், தலைவர் பழ.வாஞ்சிநாதன், நிர்வாகிகள் பி.கருப்பையன், டி.பழனிவேல், ஆர். அமர்நாத், கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, பால்கி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் கே.வேலாயுதம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் வே.எழுமலை, பிரபு (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் மணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.