தேர்தல் பத்திரம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், நகர செயலாளர் எம். பிரகலநாதன், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ஏ. லட்சுமணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.