புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஏப்.17) நந்தனத்தில் உள்ள ஓய்வூதியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற பள்ளி கல்லுரி ஆசிரியர் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் கு.பூபாலன், பி.எஸ்.அப்பன் (தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்), இரா.பெருமாள் சாமி (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்) உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர்.