districts

img

பேருந்து ஊழியர்கள் மீது வழக்கு பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22 - போக்குவரத்து ஊழியர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெறக்கோரி பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி கடந்த 18ந் தேதி 29ஏ பேருந்து சென்றது. புரசைவாக்கத்தில் ஏறிய பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் பயணித்துள்ளனர். மாணவர்களை உள்ளே வரும்படி வற்புறுத்திய ஓட்டுநர், நடத்துநரை ஓட்டேரி அருகே கல்லால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த ஓட்டுநர், நடத்துனர் ஸ்டாரன்ஸ் சாலையில் பேருந்தை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 ஊழியர்கள் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்ப பெறக்கோரி செவ்வாயன்று (பிப்.21) அதிகாலை 32 பணிமனைகளில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.