தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்ததை திரும்பப்பெற வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டம் சார்பில் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் எஸ். பழனிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.ராமன், பொருளாளர் செந்தில் வேல், மண்டல செயற்குழு உறுப்பினர் எம்.குமார், கிளை தலைவர் பாலகுமாரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.