ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 77 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில முழுவதும் வெள்ளியன்று (மே 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.