ஆணவ கொலைகள், சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஊத்தங்கரை வட்டக்குழு சார்பில் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், கோவிந்தசாமி, சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி,மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், அண்ணாமலை,நாராயண மூர்த்தி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார்,செல்வராசு, பாஞ்சாலராசன், சேகர்,முத்துக்குமார் விஜயகுப்பன்,வேலு,எத்திராஜ், வெங்கடாசலம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.