districts

img

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கடலூர் பணிமனை முன்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் செவ்வாயன்று (ஏப் 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன், மண்டலத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் முருகன், பொருளாளர் அருண்பாலன், துணைச் செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.