தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜை காவல்துறை மற்றும் பாஜக குண்டர்களை வைத்து மிரட்டிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று (பிப்.27) வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் மண்டலத் தலைவர் சடகோபன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, வி.குபேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கற்பி பாலா, திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் அன்பரசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.