districts

img

அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற வன்முறை - கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற வன்முறை - கொடுமைகளை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும், மாவட்டம்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி இல்லங்களை அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வியாழனன்று (பிப்.16) மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி, சென்னை மண்டலச் செயலாளர் கே.பி.பாபு, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.மனோன்மணி  (மத்திய சென்னை), எம்.குமார் (தென்சென்னை), ராணி (வடசென்னை), சென்னை மாநகராட்சி 123வது வார்டு கவுன்சிலர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.