districts

img

கல்வி உதவித் தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் சிதம்பரத்தில் லப்பை தெரு பள்ளிவாசல் தலைவர் முகமது ஹலீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் மூசா, மனிதம் அமைப்பின் மாநிலச் அமைப்பாளர் எஸ் ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாவட்டத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர்.