ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.சீனிவாசன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டம் பழனி பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேசன், ஆர்.சிவக்குமார், த.ஞானமுருகன், என்.குணசங்கர், டி.பலராமன், துரைராஜ், என்.தேவி ஆகியோர் பேசினர்.