ஏழை மக்களை பாதிக்கும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 3) பகுதிச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர் அலமேலு ஆகியோர் பேசினர்.
மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எர்ணாவூர் கிளைகளின் சார்பில் வெள்ளியன்று (மார்ச் 3) பகுதிக் குழு உறுப்பினர் கே.வெங்கடய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் கிளைச் செயலாளர்கள் ஆரோக்கியசாமி. ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 3) எம்ஜிஆர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, தீ.சந்துரு, சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர் டி.விஜயகுமாரி மற்றும் ஏ.முருகன் (ஆட்டோ சங்கம்), ஆனந்த் (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.
மயிலாப்பூர் பகுதி சார்பில் லஸ் சிக்னலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், எம்.சரஸ்வதி எம்.சி., பல்லக்கு மாநகர் கிளைச் செயலாளர் மாரிமுத்து, மற்றும் விஜயா (சிஐடியு) உள்ளிட்டோர் பேசினர்.
தி.நகர் பகுதி சார்பில் மகாராஜ புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், கிளைச் செயலாளர் ஜோதி மற்றும் அனீபா (ஆட்டோ சங்கம்), எம்.குமார் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வியாழனன்று (மார்ச் 2) வில்லிவாக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி. அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி பகுதி குழு உறுப்பினர்கள் வி. டில்லிபாபு, ஏ.எல். மனோகரன், சி.மார்ட்டின் கிளைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, சலோமி, ஜோதி உள்ளிட்டோர் பேசினர்.
எழும்பூர் பகுதி, 99 வது வட்டம் நேரு பூங்கா கிளை சார்பில் அ.ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, சிபிஎம் நிர்வாகிகள் டி.திருமலை, ஆ.நாகராணி, கோ.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.