திருவொற்றியூர் கான்கார் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளைத் தலைவர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் பகுதி முன்னாள் தலைவர் அருமைராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் நித்தியராஜ், மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதி நிர்வாகிகள் சேகுவேரா, ஸ்டாலின், தமிழ்செல்வி கிளைச் செயலாளர் ஜான் வில்லியம்ஸ், ஊர் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.