சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், தமுஎகச மற்றும் சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மதுராந்தகம் தேரடி வீதியில் சிறப்பு கருத்தரங்கம் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ெஜயந்தி தலைமையில் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தமுஎகச மாவட்ட தலைவர் இ.சங்கரதாஸ் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.