சென்னை,டிச.6- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். இதை பயன்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் குட்கா விற்பனை தலைதூக்கியுள்ளது. குறிப்பாக மார்க்கெட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகளில் ஹான்ஸ் பாக்கெட் ரூ.80க்கும் பாக்கு 40க்கும் மாவா 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்த டிரைவர்கள் அதிக அளவில் வருவதால் அவர்களுக்கு வேண்டிய குட்கா சில்லறையாகவும் மொத்தமாகவும் கிடைக்கிறது. இதுதவிர டன் கணக்கில் பெரிய கடைகளில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.