காஞ்சிபுரம்,செப்.28- காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) 17 வது ஆண்டு பேரவை கூட்டம் புதனன்று (செப்.27) காஞ்சி புரத்தில் மாவட்டத்தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் வி.சிவபிரகாசம் வேலை அறிக்கையையும் பொருளாளர் எஸ்.பழனி வரவு,செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். கூட்டுறவு சங்கத் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்குரிமை வழங்கவேண்டும், கைத்தறி பட்டு ரகங்களை சட்டவிரோதமாக விசைத்தறியில் மில் உற்பத்தி செய்வதை தடைசெய்யவேண்டும், நெசவாளர்களுக்கு மழைக்காலங்களில் மாதம் ரூ5ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும், பென்சன் தொகையை ரூ 5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், நெசவாளர் நலச்சங்கம் அமல்படுத்த வேண்டும், தனியார் நெசவாளர்களுக்கு போனஸ் சட்டம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. பேரவையில் போக்குவரத்து அரங்க நிர்வாகி ஆர்.மதுசூதனன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக ஜி.லட்சுமிபதி, செயலாளராக கே.ஜீவா, பொருளாளராக ஜி.வசந்தா உள்ளிட்ட 22பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சம்மேளன மாநில மாநாடு கைத்தறி சம்மேளன 13ஆவது மாநில மாநாடு அக்டோபர் 28, 29 தேதிகளில் காஞ்சி புரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது. 61பேர் கொண்ட வரவேற்புக்குழு விற்கு தலைவராக டி.ஸ்ரீதர், செய லாளராக கே.ஜீவா, பொருளாள ராக ஜி.எஸ்.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.