புதுச்சேரி, ஏப். 27- குறைந்தபட்ச ஓய்வூதிய மாதம் ரூ. 9000 பஞ்சபடியுடன் வழங்கக் கோரி வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறும் பணி யாளர்கள் (ஈபிஎப் பென்ஷனர்கள்) சங்கம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி முதலியார் பேட்டை 100 அடி சாலையிலுள்ள ஈபிஎப்ஒ ஆணையர் அலு வலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு ஈபிஎப் பென்சனர்கள் நல சங்கத்தின் புதுச்சேரி தலைவர் வி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவி லான சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் கே.பி.பாபு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். புதுச்சேரி மாநில ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செய லாளர் குணசேகரன், சிஐடியு மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், நிர்வாகி கள் சுப்பிரமணியன், ராமலிங்கம், செல்வ ராஜ், வேலாயுதம் உள்ளிட்ட திரளான பென்சனர்கள் போராட்டத்தில் பங்கேற்ற னர்.