சாதி ஆணவப்படுகொலைகள் தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்ட குழு சார்பில் வியாழனன்று (டிச 16) தங்கசாலை மின்ட் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஏ.விஜய் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணன், பொருளாளர் முருகேசன், பகுதித்தலைவர் நீதிதேவன், அபிராமி, தமிழ்செல்வி, கார்த்தி, நாகராஜ், சுரேந்தர், ஜூகைப்முஜாகித், சுபாஷ், நித்தீஷ் (மாணவர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.