விழுப்புரம், டிச. 20- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் ஆதிக்க சாதியினர் அப கரித்து வைத்துள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்க வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் பேரவை தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மற்றும் தமிழக நில உரிமை கூட்டமைப்பு சார்பில் திண்டிவனம் சார் ஆட்சியரிடம் மனு அளித்த னர். அந்த மனுவில், தலித் மக்களுக்கு மட்டுமே உரிமையான பஞ்சமி ஏ.டி. கண்டிசன், டி.சி. நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக சிலர் ஆக்கிர மித்து அனுபவித்து வரு கின்றனர்.