districts

பத்திரிகையாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சென்னை, ஜூன் 8-

    குரோம்பேட்டை ஹஸ்தினாபுரத்தில் பத்திரிகையாளரை  தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறையை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (டியுஜெ) கேட்டுக்கொண்டுள்ளது.

    இது குறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்ட அறிக்கையில், குரோம்பேட்டை நியூகாலனியை  சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மாத இதழ்  ஒன்றை நடத்திவருகிறார்.  இந்த நிலையில்கடந்த ஜூன் 1ம் தேதி, “ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகே திமுகவினர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் பந்தல் அமைத்து,பேனர்கள் வைத்துள்ளதாக அறிந்து அதை செல்போனில் படம்பிடித்தார். அப்போது  அங்கு இருந்த திமுக இளைஞர்  அணி பிரமுகர் நரேஷ் என்பவர்  கோவிந்தராஜை, தரக்குறைவாக பேசிக்கொண்டே சரமாரியாக தாக்கி யுள்ளார். ஆனால் இதுவரை அந்த நபரை கைது செய்ய  மறுக்கும் சிட்லபாக்கம் காவல்துறையினர் போக்கை வன்மையாக கண்டிப்பதாக புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

   எனவே  தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த  விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.