districts

img

ரூ 1.31 கோடியில் அலங்கார மின் விளக்குகள்

சிதம்பரம், பிப்.01- சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தேரோடும் 4 வீதிகள் மற்றும் பிரதான சாலைகளில் ரூ. 1 கோடியே 31 லட்சம் செலவில் மின் கம்பங்களுடன் கூடிய அலங்கார எல்இடி விளக்கு கள் அமைக்கும் பணியின் துவக்க விழா நிகழ்ச்சி வைப்பு சாவடி பகுதியில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் கே. ஆர். செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.   அதேபோல் சிதம்பரம் நகராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 95 லட்சம் செலவில் நகராட்சி தச்சன் குளத்தை தூர்வாரி நடைபாதை அமைத்து மேம்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகராட்சி உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகர், மணி கண்டன், சரவணன், கல்பனா, ராஜன், சுதா குமார், சுனிதா மாரி யப்பன், அசோகன், லதா, சுந்தரி சேகர், திமுக நகர துணை செயலாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனி ருந்தனர்.