லூப் சாலை பகுதியை மீன்பிடி மண்டலமாக அறிவித்திடுக
மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
சென்னை, ஏப். 13 - நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு (சிஐடியு) வலி யுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவையடுத்து நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள மீன் கடை களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப் படுத்த முயற்சித்தனர். மீனவர்க ளின் கடும் எதிர்ப்பின் காரணமாக லூப் சாலை யின் ஒரு பக்கம் உள்ள கடைகளை மட்டும் அகற்றி, தடுப்பு வைத்துள்ளனர். கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து ஏப்.13 அன்றும் லூப் சாலையில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய த.வேலு எம்எல்ஏ, பிரச்சனையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மீண்டும் கடைகள் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாநகராட்சி அமைத்த தடுப்புகளை அகற்ற உறுதி அளித்த தால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கலந்து கொண்டது. கூட்டமைப்பின் பொரு ளாளர் எஸ்.ஜெயசங்கரன், தென்சென்னை மாவட்ட தலைவர் ஜெ.அன்புரோஸ், பொரு ளாளர் எஸ்.பரமசிவன், நொச்சிக்குப்பம் கிளை தலைவர் எஸ்.எத்திராஜ், செய லாளர் ரஞ்சித்குமார், பொருளார் எம்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லூப் சாலையில் உள்ள மீன் கடை களை அகற்றுவதை கைவிட வேண்டும், தன்னிச்சையான தீர்ப்பை நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும், தற்போது மீன்கடை கள் உள்ள இடத்திலேயே நவீன மீன் அங்காடி களை அமைக்க வேண்டும். நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான பகுதியை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீன்பிடி தொழிலையும், மீன் விற்பனை செய்வதையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலமானார்
செங்கல்பட்டு, ஏப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்போரூர் ஒன்றிய குழு உறுப்பினர் விக்னேஷின் தாயார் லட்சுமி உடல் நலக்குறைவால் புதனன்று (எப்பரல் 12) இரவு காலமானார். அவருக்கு வயது 50. திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.சேஷாத்ரி, க.பகசிங் தாஸ், ஒன்றிய செயலாளர் செல்வம், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் ச.ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ் பாரதி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
சென்னை,ஏப்.13- சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் புதனன்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். போலீஸ் விசாரணையில் மணலி காவல் நிலை யத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைதான சிறுவன் அறை யின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்புவது தெரியவந்தது. மீதமுள்ள அனைத்து அறை களையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்பதும் தெரிய வந்தது. இத னையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடினர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் ஏப் 20 சோதனை ஓட்டம்
ஆலந்தூர்,ஏப்.13- சென்னையில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் வருகிற 20-ந் தேதி விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படஉள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோரை சோதனை செய்ய தற்போது சர்வதேச புறப்பாடு முனையத்தில் 22 கவுண்டர்களும், வருகை முனையத்தில் 34 கவுண்டர்களும் உள்ளன. ஆனால் புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தில் 108 கவுண்டர்களும் இருக்கிறது. வருகை பகுதியில் 54 கவுண்டர்களும், புறப்பாட்டு முனையத்தில் 54 கவுண்டர்கள் உள்ளன. இது அதிகமாக பயணிகள் வரும் பொழுது கையாள்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பயணிகளிடையே அதிக எரிபார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான சில வழிமுறை களை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதால் பயன்பாட்டுக்கு வருவது தாமதமாவதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி புதிய ஒருங்கிணைத்த முனையத்தில் சோதனை முறை யில் விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அன்று முதல் வெளிநாட்டு விமானங்கள் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் புதிய முனையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநங்கை மர்ம மரணம்
சென்னை,ஏப். 13- கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரேகா (வயது40). என்ற திருநங்கை வியாழனன்று திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில் சாலையோரம் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாத்தாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி
சென்னை, ஏப். 13- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியிடம் பள்ளி தாளாளர் பாலியல் வன்புணர்ச்சி
மாதர் சங்கம் கடும் கண்டனம்
கடலூர், ஏப். 13- சிறுமியிடம் பள்ளியின் தாளாளர் பாலியல் வன் புணர்ச்சி செய்த சம்ப வத்திற்கு அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.மல்லிகா, செயலாளர் பி.மாதவி, மாநில செயற் குழு உறுப்பினர் வி.மேரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: விருத்தாசலம் பகுதியில் ஆலடி ரோடு அருகில் வைத்தியலிங்கா ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராக விருத்தாசலம் நகராட்சி 30ஆவது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் பக்கிரி சாமி உள்ளார். இந்நிலையில் பள்ளி யின் தாளாளர் விருத்தாச லம் பகுதியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள் ள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளியின் தாளாளரே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதை வன்மை யாக கண்டிக்கிறோம். இதே போல் எருமானூர் அருகில் உள்ள விஇடி உயர்நிலைப் பள்ளி, வீராரெட்டி குப்பம் அமலா பள்ளி ஆகிய இடங்க ளில் பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே பள்ளிகளில் பாலி யல் வன்முறை, பாலியல் சீண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசும், காவல் துறையும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்த பள்ளியில் ஏற்கனவே இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துள்ளதா என்று காவல் துறை ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
அரசு பேருந்தை மீண்டும் இயக்க சிபிஎம் கோரிக்கை
திருவண்ணாமலை, ஏப். 13- நின்றுபோன அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் ஒன்றியச் செயலாளர் ந.சேகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திரு வண்ணாமலை மண்டல பொது மேலாளரி டம் மனு அளித்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் இருந்து வந்த வாசிக்கு தாடிநொளம்பை, வல்லம். எறும்பூர் வழியாக இயங்கி வந்த டபிள்யு 5 எனும் நகரப்பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப் படமால் உள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியம், வந்தவாசி தாலுக்கா அலுவலகம், வங்கி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு சென்று வரவும், வயதானவர்கள், கர்ப்பிணி கள் மருத்துவமனைக்கு செல்லவும், மாண வர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரவும் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கடந்த 2021 செப்டம்பர் 1ஆம் தேதி வந்தவாசி தாலுக்கா அலுவலகம் முன்பும், 2022 டிசம்பர் 23ஆம் தேதி கோழிப் புலியூர் கூட்டுச்சாலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. பெரணமல்லூர் - தாடிநொளம்பை வல்லம் வரை தார்சாலை அமைக்கப் பட்டுள்ளது. எனவே மறியல் காத்திருப்பு போராட்டம் என அடுத்த போரட்டத்திற்கு மக்கள் செல்லும் முன்பு மீண்டும் நகரப் பேருந்தை இயக்க நடவடிக்கை வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் தொழிலாளி பலி
ஆம்பூர், ஏப். 13- திருப்பத்தூர் மாவட்டம், கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாயன் 50). இவர் புதன்கிழமை இரவு மின்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன் றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மாயன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் மாயன் உடலைக் கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி, ஏப். 13- திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் காவல் சரகம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள எக்கா மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து காவல் துறையினர் அங்கு சென்று சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சாரா யம் காய்ச்சிக் கொண்டி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வீரபாண்டி கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்த பாலு (45) என்பவரை கைது செய்து, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர். அதேபோல் ஒட்டம்பட்டு கிராமத்தில் சாரயம் காய்ச்சிக் கொண்டிருந்த ராஜேந்திரன் (33) என்ப வரை கைது செய்து, அங்கி ருந்த 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்த னர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு
ஆம்பூர், ஏப். 13- திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பி. கட்டுப்பாட்டு அறைக்கு மின்னூர் ஊராட்சி எம்.சி.ரோட்டு சேர்ந்த பொதுமக்கள் வாலிபர் ஒரு வர் மிரட்டி பணம் பறிப்ப தாக புகார் அளித்தனர். இதை யடுத்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கண் காணிப்பு பணியில் ஈடு பட்டனர். அப்போது மின்னூர் எம்சி சாலையில் வசிக்கும் சுகன் (எ) பப்லு (22) பொது மக்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்
அரசு கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும்: சிபிஎம்
திருவண்ணாமலை, ஏப்.13- திருவண்ணாமலை அரசு கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து, கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: திருவண்ணாமலை செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி செயல்படு கிறது. இந்த கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று (ஏப். 14) இந்து சமயம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக தெரிய வருகிறது. அனைத்து இன பிரிவுகளை சார்ந்த மாணவர்களும், நல்லிணக் கத்துடன் கல்வி பயிலும் அரசு கல்லூரி யில், ஒரு மதம் சார்ந்த வழிபாடு நிகழ்ச்சி களை நடத்தினால், அதே போல் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், கல்லூரி வளாகத்தில் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய சூழல் உருவாகும். இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப் படும். எனவே திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடை பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.