கடலூர், ஏப்.30- கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முந்திரி உலக அளவில் பிரசித்தி பெற்றவை யாக கருதப்படுகிறது. பெரிய வியாபாரிகளின் லாப வேட்கை யால் வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் முந்திரி கொட்டைகள் பண்ருட்டிக்கு இறக்குமதி செய்து அதனை உடைத்து தரம் பிரித்து பண்ருட்டி முந்திரி என்று மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் தற்போது பண்ருட்டியில் விளையும் முந்திரிக்கு மவுசு குறைந்ததோடு, விலையும் குறைந்துள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் முந்திரி விவசாயத்தை படிப்படியாக கைவிட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் முந்திரி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாத்திப்பட்டு, முத்தாண்டி குப்பம், மானடி குப்பம், மருங்கூர், காடாம்புலியூர், பணிக் கன்குப்பம், காட்டு பாளையம், மேட்டுக் குப்பம் செம்மேடு, நடுவீரப்பட்டு, வெள்ளக் கரை, சத்திரம், தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிக்காடு உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூ பூக்க தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் முந்திரி கொட்டை கள் சாகுபடிக்கு தயாராக இருக்கும், இந்தாண்டு போதிய மழை இல்லாததாலும், கடுமையான வெயில் தாக்கத்தாலும் குறைந்த அளவே முந்திரி பூக்கள் பூத்து, காய்ப்பு நேரத்தில் பிஞ்சுலேயே கருகி வீணாகி வருகிறது. முந்திரியில் மருந்து தெளித்தல் மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட செலவினங்களுக்காக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விவசாயி கள் செலவு செய்து வருகின்றனர். தற்போது வீசூம் வெப்பக்காற்றில் பிஞ்சிலேயே முந்திரி கொட்டைகள் கருகி கீழே கொட்டி வருவதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. மானிய விலையில் மருந்து தெளிப்பான் மற்றும் முந்திரி விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்யப்படும் முந்திரி, இந்த ஆண்டு விவசாயிகளை ஏமாற்றியதால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கின்றனர். முந்திரி என்ற பெயரில் நஷ்டத்தை அறுவடை செய்யும் இந்த அரசு காப்பாற்றவேண்டும் என்பது அநேக முந்திரி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.