சிதம்பரம், மே 9- சிதம்பரம் அருகே நஞ்சை மகத்து வாழ்க்கை நெடுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஐயப்பன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், குற்றவாளியைக் கைது செய்யாத காவல் துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியக்குழு சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (மே 9) போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இதையறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜா, வாஞ்சி நாதன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச்செல் வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுனில்குமார், கொலை செய்யப் பட்ட ஐயப்பனின் பெற்றோர், கிராம மக்களுடன் திங்களன்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் குற்றவாளியைக் கைது செய்வோம் என டிஎஸ்பி உறுதிய ளித்தார். இதனை ஏற்று போராட்டத் தைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.