சிதம்பரம், டிச. 21- கடலூர் மாவட்டம், கீழ் வளையமாதேவி கிரா மத்தில் 35-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டு களாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். பருவ மழை யால் சாலைகள் சேரும் சகதியுமாக நடந்து கூட செல்ல முடியாத நிலை யில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலி யுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், கீழ் வளையமாதேவி கிராம மக்கள் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க த்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமை யில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் புவனகிரி வட்டாட்சியரை சந்தித்தனர். அப்போது, மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.