சென்னை, ஏப்.26 - பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அம்பத்தூர் பால் பொருட்கள் பண்ணையில் தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட ஐஸ்கிரீம் உற்பத்தி அலகினை புதன்கிழமை (ஏப்.26) ஆய்வு செய்தார். அண்மையில் பேட்ரி வண்டிகள் மூலம் ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து கோடைக்காலத்தில் தங்கு தடையின்றி அனைவருக்கும் ஐஸ்கிரீம், பால் மற்றும் பால் உப பொருட்கள் கிடைத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாள் ஒன்றுக்கு சுமார் 10 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி திறன் கொண்ட இந்ரத ஐஸ்கிரீம் அலகின் ஆய்வின்போது ஐஸ்கிரீம் மற்றும் தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் மெட்டீரியல்கள் இருப்பு வைக்கவும் தயாரிப்பு பணிகளில் எவ்வித தொய்வுமின்றி முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கோடைக்கால விற்பனையை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பால் பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர்.ந.சுப்பையன், இணை நிர்வாக இயக்குநர் கே.எம்.சரயு மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலு வலர்கள் கலந்துகொண்டனர்.