மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் 4 நாட்கள் கடந்து பிறகும் கொரட்டூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்படா மல் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.