கடலூர், ஆக.1- கடலூரில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ எம்எல் லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் ஜவான் பவன் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அந்த தடுப்பை மீறி சென்றவர்களை தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்போது சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ. மாதவனை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தின்போது 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, சிபிஐ சார்பில் வி.எம் சேகர் தலைமை தாங்கினார்.
வேலூர்-திருப்பத்தூர்
வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியாத்தம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மையங்க ளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூரில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜி. லதா ஆகியோர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் வெ. ராஜ சேகரன் பங்கேற்றார். குடியாத்தம் பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் நடை பெற்றது. திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் நந்தி தலைமையில் நடை பெற்றது. கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து மறியல் போராட்டம் நடத்தின.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக் கோணம், வாலாஜா, ஆற்காடு, கலவை ஆகிய 4 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அரக்கோணத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், எபிஎம். சீனிவாசன், ராணிப் பேட்டையில் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமை யில் மாநிலக் குழு உறுப்பி னர் ஆர். பத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். கலவை தாலுகா செய லாளர் எஸ். கிட்டு தலை மையில் நடந்த மறியல் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் 4 முனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை சென்றடைந்தது அங்கு மறியல் நடைபெற்றது. திண்டிவனத்தில் நடை பெற்ற போராட் டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஆ.இன்பஒளி ஆகியோர் தலைமை தாங்கினர். உளுந்தூர்பேட்டையில் தள்ளுமுள்ளு-தகராறு கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன், சிபிஐ மாவட்ட பொருளாளர் எம்.வெங்கடேசன், சிபிஐ எம்எல் மாவட்டச் செய லாளர் டி.கலியமூர்த்தி, தலைமையிலும், திருக் கோவிலூரில் பி.சுப்பிர மணியன், கே.ராமசாமி, ஜி.லோகநாதன் ஆகி யோர் தலைமையில் சங்கரா புரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஏ.சுப்பிரமணியன், ஆகி யோர் தலைமையிலும், வெள்ளிமலையில் மாவட்ட செயற்குழு வி. ஏழுமலை, இரா.சின்னசாமி, ஆகியோர் தலைமையிலும் மறியல் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் அ. பாக்கியம், சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. ஆரணியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா.தங்கராஜ் கலந்து கொண்டனர். வடமாவட்டங்கள் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற்ற மறியல் மற்றும் ஊர்வலத்தில் திராளனோர் கலந்து கொண்டனர். மாவட்ட, வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.