வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம்
வண்டலூர்டி, டிச.25 - வார இறுதிநாள் விடு முறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் வண்ட லூர் பூங்காவில்குவிந்து இருந்தனர். இதனால் பூங்கா முழுவதும் கூட்டம் களை கட்டியது. வார இறுதி விடு முறை நாளான கடந்த 2 நாட்களில் பார்வையாளர் களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்து மஸ் விடுமுறையின் போது (டிசம்பர் 24,25 மற்றும் 26-ந்தேதிகளில்) 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப் பட்டது என்று பூங்கா அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னையில் குடிநீர், கழிவு நீர் பிரச்சனைகளை கண்டறிய அதிநவீன எண்டோபோட் கேமராக்கள்
சென்னை, டிச. 25- சென்னையில் குடிநீர் பிரச்ச னையை தீர்க்கும் வகையில், முதல் முறையாக குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிய அதிநவீன எண்டோபோட் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அமைக்கப் பட்டு இருக்கும் பைப் லைன்களை மேம்படுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் பழைய பைப் லைன்கள் பழுதாகி வருவதாக அடிக் கடி புகார் எழுகிறது. குறிப்பாக குடிநீர் வினியோகம் செய்ய 5,500 கி.மீ. குழாயும், கழிவு நீரை வெளியேற்ற 5,200 கி.மீ. குழாயும் பதிக்கப்பட் டுள்ளது. மேலும் கழிவு நீர் குழாயில் ஏற்படும் அடைப்புகளை அகற்றும் வசதிகளுக் காக 30 மீட்டர் இடைவெளியில் மேன்ஹோல் அமைத்து அதில் 1.40 லட்சம் மூடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக மேம்படுத்தப் படாமல் குழாய்கள் இருப்பதால் சாலை மட்டத்திலிருந்து மூன்று முதல் பத்து அடிவரை ஆழத்தில் இருக்கும் குழாயில் லேசான விரிசல் ஏற்பட்டாலே, குடிநீரில் கழிவுநீர் கலந்து விடும். இந்நிலையில் குழாயில் ஏற்படும் சேதத்தை கண்டுபிடிக்க தோண்டப் படும் பள்ளங்கள் மூலம் தீர்வு கிடைக்க கிட்டத்தட்ட மூன்று நாட்களா கும், இதன் செலவும் அதிகம். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் குழாய் அடைப்புகளை அடையாளம் காணும் ரோபோ கேமராவை கண்டுபிடித்தார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு ஐஐடி-யின் ஒப்புதலுடன் இந்த கேமராக்கள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு உதவி வருகிறார். முதற்கட்டமாக சோதனை முயற்சியாக தண்டையார்பேட்டை, வளசரவாக்கம், புழுதிவாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய் அடைப்புகளை இந்த கேமரா வாயிலாக கண்டுபிடித்து சில மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் பிரச்ச னையை தீர்க்கவும், சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், பைப்லைன் களில் இருக்கும் சிக்கல்களை அடையா ளம் காணவும், அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக சென்னையின் கழிவுநீர் அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பெருநகர நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம், அதிநவீன எண்டோபோட் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னை மக்கள் நல்ல குடிநீரை பெறுவதை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக வளசர வாக்கத்தில் ஆய்வு செய்ததில், எச்டிபிஇ குழாய்கள் அதிக அளவில் சேதமடைந்து இருப்பது கண்டறியப் பட்டது. எனவே எச்டிபிஇ குழாய் களுக்கு பதிலாக டிஐ குழாய்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் நகரம் முழுக்க நீர் விநியோகம் செய்வதில் இருக்கும் சிக்கலை தீர்க்க ஒரு விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பைப் லைன்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் கசிவுகளை கண்டறிய எண்டோபோட் கேமராக்களை பயன் படுத்தவும் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லும் பைப்லைன்களில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு அவற்றை சரி செய்ய முடியும். இது சென்னையில் தங்கு தடை இல்லாமல் சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே
டெல்லி, டிச. 25– தென் இந்தியாவில் இருந்து செல்லும் 24 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது:- “கோவை – நிஜாமுதின் கொங்கு விரைவு ரயில் டிசம்பர் 31, ஜனவரி 7 ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக ஜனவரி 3, 10 ந் தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் டிசம்பர் 31, ஜனவரி 7 ந் தேதிகளி லும், மறுமார்க்கமாக ஜனவரி 2, 9 ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படும். கேரளத்தின் கொச்சுவேலி, எர்ணா குளத்தில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் உத்தர பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களுக்குச் செல்லும் ஹம்சாபர், ராப்திசாகர் உள்ளிட்ட 24 விரைவு ரயில்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப் படும். மேலும் டெல்லியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் கரீப் ரத் அதிவிரைவு ரயில் ஜனவரி 1, 8 ந் தேதிகளில் வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல் வழியாக வருவ தற்கு பதிலாக பெத்தப்பள்ளி, நிஷாமாபாத், காச்சிக்கூடா, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். இதேபோல், சென்னை சென்டிரல் – பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்:12851/ 12852) விஜயவாடா வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரம்
என்ஐஏ விசாரணை
சென்னை, டிச. 25- சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பி லான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணை நடத்த வுள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை கடத்துவதாக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதயகுமாரி டம் விசாரணை நடத்திய காவல் துறை யினர், அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த அக்பர் அலி என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து உதயகுமார் மற்றும் அக்பர் அலி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ. 280 கோடி மதிப்பிலான 56 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் அவர்களிடம் மத்திய போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணயில், மணிப்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 56 கிலோ போதைப் பொருள் கடத்தப்பட்டு வந்தது அம்பலமானது. ஏற்கனவே கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறையில் இருந்த அக்பர் அலி மீண்டும் கடத்தலில் ஈடுபட்டுள்ள தும், ஒரு கிலோ, இரண்டு கிலோ என போதைப் பொருளை தனித் தனியாக பிரித்து ராமநாதபுரம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கடல் மற்றும் விமான வழிகள் வாயிலாக நூதன முறையில் இலங் கைக்கு கடத்த திட்டமிட்டதும் விசாரணை யில் தெரியவந்தது. மேலும் பெயிண்ட் டப்பாக்களில் சந்தே கம் வராதபடி போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டதும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் மூலமாக கடத்தல் நடைபெற்று வந்ததாகவும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் போதை பொருள் கடத்தப்பட்டதில் தீவிரவாத தொடர்பு உள்ளதா என என்ஐஏ அமைப்பு விசாரிக்க உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்த உதயகுமார் குறித்து தகவல் கேட்டு இலங்கை தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. போதைப் பொருள் கடத்தினால் கிடைக்கப்படும் பணத்தை பயன்படுத்தி தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட பயன்படுத்தப்படுகிறதா என விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களை தொடர்பு கொண்ட வர்களையும் அவர்களுக்கு வந்த சர்வதேச தொடர்புகளையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
விவசாயிகளை அவமதிக்கும் வேளாண்மை உதவி இயக்குநர்
நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
திருவண்ணாமலை,டிச.24- பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜன், விவசாயிகளை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிபிஎம் வட்டார செய லாளர் ந.சேகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், பெரண மல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜன், அலுவலகத்துக்கு வரும் விவ சாயிகளை அவமரியாதையாக நடத்துவதுடன் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் எதையும் தெரிவிக்காமல் வெளிப்படைத் தன்மையின்றி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து கடந்த ஜூலை 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறி வித்ததன் பின்னணியில் திரு வண்ணாமலை இணை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் துவக்கத்தி லேயே அலுவலகத்திலிருந்து வெளி யேறிய கோவிந்தராஜன் சங்க மாவட்டச் செயலாளரை மிக கேவல மான வார்த்தையில் போனில் திட்டி னார். எனவே தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பெரணமல்லூர் ஒன்றியக்குழு சார்பில் பெரண மல்லூர் வேளாண்மை அலுவலகம் முன்பு கடந்த ஜூலை 12 ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடைபெற்றது. முடிவில் இணை இயக்குநர் கண்ணகி, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பெரண மல்லூர் உதவி இயக்குநர் (வேளாண்மை) கோவிந்தராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சென்னை வேளாண்மை ஆணையருக்குக் கடிதம் எழுதுவதாக அளித்த உத்தர வாதத்தின் அடிப்படையில் காத்தி ருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஐந்து மாதங்கள் கடந்தும் இன்றுவரை அவர்மீது நட வடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த தைரியத்தில் மீண்டும் விவ சாயிகளை அவமரியாதையாக நடத்துவது தொடர்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கேட்பதற்கு சரியான பதில் சொல்வதில்லை. அண்மையில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர், தாம் வாங்கிய விதை உளுந்துக்கும், துவரைக்கும் செலுத்திய தொகை ரூ.500 க்கு ரசீது கேட்டதற்குத் தகாத வார்த்தைகளால் ஏசிஅவரை அடிக்கச் சென்றுள்ளார். எனவே, சென்னை ஆணையர் பெரணமல்லூர் உதவி இயக்குநர் வேளாண்மை கோவிந்தராஜன் என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
திருவள்ளுவர் பல்கலை.யில் தொடர் குழப்பம்: மறு தேர்வு நடத்த முடிவு
வேலூர்,டிச.25- திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணித அறிவியல் கேள்வித்தாள் இளங்கலை படிப்புக்கான கேள்விகள் இடம் பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், இத்தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த சேர்க்காட்டில் உள்ள திரு வள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகம் சார்பில் நடை பெற்று வரும் பருவத் தேர்வு கேள்வித்தாள் குளறுபடி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த பருவத் தேர்வு பழைய கேள்வித்தாள் அப்படியே கேட்கப்பட்டது மாணவர்கள், பேரா சிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 8 ஆம் தேதி நடந்து முடிந்த முதுகலை இரண்டாம் ஆண்டு கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கணித அறிவியல் கேள்வித்தாளில் இளங்கலை கணித அறிவியல் படிப்பில் கேட்கப்படும் கேள்விகள் அதிகம் இடம் பெற்றி ருந்தன. இந்த விடைத்தாள்களை திருத்த கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி வரும் 27 ஆம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘சர்ச்சைக்குரிய கேள்வித்தாளில் 75 மதிப்பெண்ணில் 58 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இளங்கலை பாடங்களிலிருந்தும், மேலும் சில கேள்விகள் பாடங்களுக்கு வெளியே கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தவறாக வந்துள்ள கேள்விக ளுக்கு ஏதாவது ஒன்றை பதில் எழுதினால் 58 மதிப்பெண் கொடுத்தே ஆக வேண்டும். தவறான கேள்விகள் தேர்வு மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ஆசிரியர்கள் பலரும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வில்லையாம். இதனால் வரும் 27 ஆம் தேதி மறுதேர்வு நடத்த பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வரு கிறது’ என்றனர். இதுகுறித்து, திருவள்ளுவர் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘50 விழுக்காட்டுக்கும் அதிகமான கேள்விகள் வெளி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டது மறு தேர்வு நடத்த உள்ளோம்’ என்றனர்.
சிதம்பரம் கோவிலில் அரசாணையை மீறிய தீட்சிதர்கள்
சிதம்பரம், டிச. 25- சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிச. 26 அன்று ஆரூத்ரா தேரோட்டம் மற்றும் டிச.27 அன்று தரிசன விழா நடை பெறுகிறது. இதனால், கனக சபை மீது ஏறி பொதுமக்கள் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வழிபடலாம் என அரசாணை வெளியிட்டது. ஆனால், 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கனக சபையில் பக்தர்களை ஏறி வழிபட அனுமதிக்க முடி யாது என வழி தீட்சிதர்கள் பூட்டு போட்டனர். கனக சபையை வழிபடுவதற்கு பூட்டை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் சிலர் கோரிக்கை விடுத்தும் தீட்சிதர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து இந்து சமய அறநிலைத்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் இந்து அறநிலைய துறை யின் செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையினர் இது குறித்து தீட்சிதர்களிடம் கேட்டபோது அவர்கள் திறக்க முடியாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கனக சபையில் ஏறி வழிபட அரசாணை உள்ளது என கூறினார். அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, அரசு அதிகாரி கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி யுள்ளார்.6 மாதத்திற்கு முன்பு தீட்சிதர்கள் இதேபோன்று பிரச்சனையை ஏற்படுத்தினர்.
காவேரிப்பாக்கம் அருகே வாலிபர் கொலை: காவல்துறை விசாரணை
ராணிப்பேட்டை, டிச. 25 - ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் - திருப்பாற்கடல் சாலையில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஞாயிறன்று (டிச. 24) தலை, முகம் சிதைந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாணமாக கிடப்பதாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, அரக்கோணம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த வாலி பர் சரவணன் (40) கூலி வேலை செய்து மனைவியுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து மனைவி மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிபிஎம் தலைவர்கள் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்டத் தலைவர் சேகர், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
எம்எல்ஏ ஆறுதல்
கிருஷ்ணகிரி,டிச.25- பா்கூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 3 மாண வா்களின் குடும்பத்தி னரை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பி னா் தே.மதியழகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பா்கூா், ஜி.நாகமங்கலம் குமாரின் மகன் கிரி (17), ரவியின் மகன் அஜய் (15), ஜெகதேவி அம்பேத்கா் காலனியை சோ்ந்த சங்கரின் மகன் ராகவன் (14) ஆகிய மூன்று பேரும் கடந்த 18-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 மாண வா்களின் வீடுகளுக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினரான தே.மதியழகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அவா்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். மேலும், மாணவா்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி யளித்தார்.