districts

img

பள்ளிசெல்லா குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்குக!

திருவள்ளூர், ஆக. 2- பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று (ஆக 2),  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர தலைமையில் நடை பெற்றது. இதில் ஆட்சியர் பேசியதாவது:  கிராம நிர்வாக அலு வலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் ஆய்வு கூட்டம் நடத்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளுக்கு வருவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பள்ளிச் செல்லாமல் உள்ள மாணவர்களே கண்டறிந்து மாணவர்களின் இடை நிற்றலை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மேலாண்மை கூட்டமைப்பு மூலம் ஊராட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் வழியாக பள்ளிக்குச் செவ்வா மல் இடை நிற்றலான மாணவர்களை கண்ட றிந்து வருகின்ற ஆகஸ்ட் 6,7,8,9 ஆகிய தேதிக்குள் மாணவர்களை பள்ளி யில் சேர்ப்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநிற்றலாக வாய்ப்புள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.