districts

img

இ-டாய்லெட் வைக்க வலியுறுத்தி சிபிஎம் கையெழுத்து இயக்கம்

சென்னை மாநகராட்சி 130ஆவது வட்டம் வடபழனி முருகன் கோவில் அருகே இருந்த பொதுக் கழிப்பிடத்தை மாநகராட்சி இடித்து அகற்றியுள்ளது. இதனால் பக்தர்களுக்கும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே, அந்த இடத்தில் இ-டாய்லெட் வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் சரவணன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.