districts

img

சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்த தம்பதிக்கு சாதி ஆதிக்க சக்திகள் கொலை மிரட்டல்

திருப்பத்தூர்,பிப்.12- வாணியம்பாடி அருகே சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்து வரும் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி வலியுறுத்தியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (24). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து  வருகிறார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வாணியம் பாடி அடுத்த தும்பேரி கிராமத்தை சேர்ந்த சந்தியா (24) என்ற பட்டிய லினத்தை சேர்ந்த பெண்ணை காத லித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், கணவாய் புதூர் கிராமத்தில்  தாய் மற்றும் தங்கையு டன் வசித்து வந்த நிலையில், சமீ பத்தில் சசிகுமாரின் தாய் வழி பாட்டி கனகா வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருடைய சடலத்தை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடை பெற்றது. அப்போது, பட்டியலின சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட சசிகுமார் ஊரை விட்டு வெளியேற வேண்டும். அப்போது தான் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என்று  ஊர் கட்டப்பஞ்சாயத்து நிபந்தனை விதித்துள்ளது.  இதற்கு, சசிகுமார் குடும்பத்தினர் அனைவரும் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி யுள்ளனர். அப்போதும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் முக்கிய பிர முகர்கள் சம்மதிக்கவில்லை. பிறகு, தனது பெரியம்மா வசித்து வரும் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளார் சசிகுமார். சடலத்தை அடக்கம் செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிய போது,  ஊருக்குள் வரக்கூடாது என்றும்  சொத்துக்களை அனைத்தை யும் கிராம கோயிலுக்கு எழுதிக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும், அதே ஊரில் தனியார் ஊதுவத்தி கம்பெனி யில் வேலை செய்து வந்த சசி குமாரின் தாயாரை வேலையை விட்டு நீக்குமாறும் கூறியுள்ளனர். அந்த குடும்பத்தில் யார் இறந்தாலும் இந்த கிராமத்தில் புதைக்கக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இந்த மிரட்டலை தொடர்ந்து சசி குமார்-சந்தியா இருவரும்  உயி ருக்கு பாதுகாப்பு கேட்டு வாணியம் பாடி கிராமிய காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.  இதுகுறித்து தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், வாணியம்பாடி தாலுகா செயலாளர் ஏ.பிச்சைமுத்து ஆகியோர் தலைமையிலான குழுவினர் சசிகுமார் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாரளித்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின் போது  மாவட்ட குழு உறுப்பினர்கள் வ.அருள் சீனி வாசன், எம்.இந்துமதி, தாலுகா குழு உறுப்பினர்கள் கே.அர்ஜுனன் சி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து வேலூர்-திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி விடுத்துள்ள அறிக்கையில்,  சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சசி குமார்-பிரபா தம்பதிக்கு காவல்துறை உரிய பாதுகாப்பும், உரிமைகளும் வழங்கி அதே ஊரில் தொடர்ந்து வசிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகுமார் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தும், சொத்துக்களை ஊர் கோவிலுக்கு எழுதிக் கொடுத்து விட்டு ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிய  ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் முக்கிய பிர முகர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.